இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது

6/6/2025 4:03:05 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

திருவேங்கடம்: நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சமுத்திரக்கனி (60). இவரது மனைவி கலிங்கி (58). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சமுத்திரக்கனிக்கு ஊருக்கு தெற்கே ேதாட்டம் உள்ளது. அங்கு கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமுத்திரக்கனிக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த கலிங்கி, கணவரை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். ஆனால் சமுத்திரக்கனி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று கலிங்கிக்கும், சமுத்திரக்கனிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கலிங்கி, விவசாய நிலத்திற்கு சென்று விட்டார். இதனிடையே மதியம் விவசாய மோட்டார் அறையில் கலிங்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என சமுத்திரக்கனி போலீசுக்கும், ஊரில் உள்ள உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் அவரது உடலை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சமுத்திரக்கனியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளத்தொடர்பு காரணமாக கலிங்கிக்கும், சமுத்திரக்கனிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது தெரிந்தது. நேற்று காலை நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சமுத்திரக்கனி, கலிங்கியை பின் தொடர்ந்து சென்று, அவரை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சேலையை கழுத்தில் கட்டி மோட்டார் அறையில் தூக்கில் தொங்க விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]