இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி

6/6/2025 3:50:58 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் பகுதி திமுக சார்பில், கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் வைர விழா பொதுக்கூட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர செயலாளர் குமார் வரவேற்றார். ஒன்றிய  செயலாளர்கள் தரன், சத்ய சாய், கண்ணன், தம்பு, ராமச்சந்திரன், ஏழுமலை, மலர்விழிகுமார், விஜயகணபதி, உசேன், இனியரசு முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது: சாது வருஷத்தில் ஏற்பட்ட பஞ்சம்போல் இந்தாண்டும் பஞ்சம் நிலவுகிறது. தமிழகமே வறட்சி மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஜெயலலிதா  ஆட்சியில் அணை கட்டினார்களா? திமுக ஆட்சியில் மாம்பழதுறை, சித்தாறு, பொகை, கொடுமுடி ஆறு,  இருக்கங்குடி,  சோத்துபாறை, பாலாறு, நல்லதங்கால், ராஜாதோப்பு உள்ளிட்ட 40 அணைகள் கட்டியுள்ளோம்.  

சென்னையில் 27 பாலங்கள் கட்டியுள்ளோம். நீங்கள் ஒரு பாலமாவது கட்டியதுண்டா? நீங்கள் கேட்ட லஞ்சம் தரமுடியாமலும் ஐஏஎஸ் அதிகாரிகள் கேட்ட லஞ்சம் தரமுடியாமலும் பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. தமிழ்நாடு துறைமுகம் மூடும் நிலைக்கு வந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்துதான் ஆந்திரா, கர்நாடகாவுக்கு நிலக்கரி கொண்டு செல்லவேண்டும். ஆந்திராவில் உள்ள துறைமுகம் மூலம் நிலக்கரி கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்கிறது. மத்திய அரசு மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறது. கொஞ்சநாள் போனால் உத்திரபிரதேச முதல்வர், யாரும் கல்யாணம் செய்யக்கூடாது என்பார். பாகிஸ்தான் நமது மக்களை கொல்கிறது.  இதில் இந்திய அரசின் பாதுகாப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு துரை முருகன் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தசரதன், வசந்தமாலா, விஸ்வநாதன், ஜெனனி ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரவீந்திரநாத், வெளிகாடு ஏழுமலை, அப்துல்மாலிக், கோகுலகண்ணன், பரணி, ஆன்ட்ரோ, ராஜா, முத்துகுமார், தணிகையரசு, அரசு, சிவக்குமார், சசிகுமார், ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]