இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு

6/5/2025 3:36:43 PM
வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்

கோவை: தங்கத்திற்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு அறிவிப்பால் பாரம்பரிய நகை தொழில் அழியும் என்றும், தங்கம் கிராமிற்கு ரூ.4,500 வரை விலை உயரும் என்றும் தங்க நகை தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வரும் ஜூலை 1ம் தேதி தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதில் தங்க நகைக்கு 1.25 சதவீதம் வரிக்கு மிகாமல் விதிக்க தங்க நகை தொழில் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர். ஆனால், அதற்கு மாறாக, நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பில், தங்க நகைக்கு 3 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரம்பரிய நகை தொழில் அழியும், பவுன் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகை தொழில் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது நகைகளுக்கு ஒரு சதவீதம் வாட் வரியும், ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஒரு சதவீதம் மத்திய அரசின் கலால் வரியும் விதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தற்போது 3 சதவீத ஜி.எஸ்.டி.வரியை விதித்துள்ளது.

மேலும் நகை உற்பத்தி தொழிலில் உள்ள உருக்குதல், கம்பி இழுத்தல், கல் பதித்தல், மெருகூட்டுதல் போன்ற பல்வேறு நிலைகளிலான பணிகளை கூலிக்காக செய்பவர்களுக்கும், பழைய நகைகளை சரி செய்பவர்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் நிறுவனங்கள் மட்டுமே தொழிலில் நீடிக்கும் நிலை உருவாகும். மேலும் 3 சதவீதம் வரி விதிப்பால் தங்கம் கிராம் ரூ.4,500 வரை (பவுன் ரூ.36ஆயிரம்) விலை உயர்ந்து, நுகர்வோரும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். 1.25 சதவீத வரி விதிப்பதுடன் தாலி, கொலுசு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துவெங்கட்ராம் கூறினார்.

மேலும் சில
  • தென்மேற்கு பருவமழை தொடக்கம் நாடு முழுவதும் சராசரியான மழை பெய்யும்: வானிலை ஆய்வுமையம் தகவல்



  • நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த ஒரே அமைப்பு: மத்திய அரசு அடுத்த அதிரடி



  • ஆயுள் தண்டனை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் லாபம் 4 கோடி



  • திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து



  • 1000 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கு சிபிஐ கோர்ட்டில் லாலு பிரசாத் ஆஜர்



  • மத்திய பிரதேசத்தில் வன்முறை துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் பலி: முழு அடைப்புக்கு காங். அழைப்பு



  • அண்ணா தொழிற்சங்க பெயர் பலகை மறைப்பு ஓபிஎஸ் அணியினர் புதிய சங்கம் துவக்கம்



  • மாடு விற்பனை தடைக்கு எதிராக கேரள சட்ட சபையில் தீர்மானம்: சிறப்பு கூட்டம் நாளை நடக்கிறது



  • ராணுவத்தினர் அதிரடி: நாகாலாந்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை



  • 6 மாதங்கள் முடிந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் சூழல் ஏற்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]