இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை

6/5/2025 3:34:00 PM
சீரழியும் மின்வாரிய நிர்வாகம் ஊழியர்கள் பகிரங்க புகார் டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) முகாமை தாக்கிய  4 தீவிரவாதிகளை துணை ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.
காஷ்மீரில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் எல்லைகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஊடுருவலை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு ராணுவ ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சூழலில் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை சும்பல் என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாமை தீவிரவாதிகள் தாக்கினர்.

இன்று அதிகாலை 3.45 மணி அளவில் பயங்கர ஆயுதங்களை தாங்கிய தீவிரவாதிகள் சும்பல் முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். அங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து உஷாரான துணை ராணுவ படையினர் தீவிரவாதிகள் மீது திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் ஹாலிவுட் சினிமா பாணியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலானது இன்று அதிகாலை 6.15 மணி வரை நீடித்தது. தகவல் அறிந்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் ராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதலை நடத்த நினைத்த சதி முறியடிக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து ஏகே 47 துப்பாக்கிகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றனர். இதை காஷ்மீர் காவல்துறை டிஜிபி சேஷ்பால் வைத் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிடட்ரில். சும்பல் முகாமை தாக்க முயற்சித்த 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு அங்கு மேலும் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ஜனாதிபதி தேர்தல் பாஜ வேட்பாளர் 20ம் தேதி அறிவிப்பு? அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற தீவிரம்



  • ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு



  • மாடு விற்பனை தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்



  • ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு



  • தேனியில் அமைக்கப்பட இருந்த நியூட்ரினோ ஆய்வகம் : ஆந்திராவுக்கு மாற்றம்



  • சர்ச்சைக்குரிய பேச்சு : ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்



  • அசாம், மணிப்பூரில் கனமழை: 13 பேர் பலி



  • பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை குறித்து டுவிட்டரில் புகார் கொடுக்கலாம் : மத்திய அரசு அறிவிப்பு



  • பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும் : நாளை முதல் அமலுக்கு வருகிறது



  • மாடுகளை விற்க கூடாது என உத்தரவு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]