இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை

6/4/2025 3:12:32 PM
காஷ்மீரில் பரபரப்பு பாக். ராணுவம், தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்: இந்திய வீரர்கள் 3 பேர் காயம் மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்

கோவை: வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்படைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக கூறி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டை நேற்று இரவு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை வெள்ளலூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 2,816 வீடுகள் கட்டப்பட்டது. ஒரு வீட்டிற்கு ரூ.3.60 லட்சம் செலவிடப்பட்டிருந்தது. நேற்று போத்தனூர் நூர்செட் மகாலில் சூளைமேடு, நஞ்சுண்டாபுரம், ராஜவாய்க்கால், முத்துசாமி காலனி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வந்த 1294 பேருக்கு வீடுகள் வழங்கும் விழா நடந்தது.அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடந்த இந்த விழாவில், கோவை நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியை சேர்ந்த 250 பயனாளிகள் பங்கேற்கவில்லை. தங்களது பகுதியில் விழா நடத்தி வீடுகளை ஒதுக்கி தராமல், பாரபட்சமாக விழா நடத்துவதாக கூறி, இவர்கள் விழாவை புறக்கணித்தனர். இது தொடர்பாக குடிசை மாற்று வாரியத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு, வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் சிலர், குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘‘இலவசமாக வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறினார்கள். ஆனால் சாவி தரும்போது 10 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பு தொகையாக 36 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். எங்களால் இந்த தொகை தர முடியாது. வீடுகளை இலவசமாக தரவேண்டும்,’’ எனக்கூறினர்.அப்போது அமைச்சர் வீட்டில் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்கள், ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து குனியமுத்தூர் போலீசார் அமைச்சர் வீட்டிற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். பெண்கள் கலைந்து ெசல்லாமல் அங்கேயே உட்கார்ந்தனர். இதனை தொடர்ந்து பெண்களை அழைத்து அமைச்சர் ஆதரவாளர்கள், குடிசை மாற்று வாரியத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அமைச்சரிடம் பேசி முடிவு எடுப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அனுப்பிவைத்தனர்.

மேலும் சில
  • திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வாரகோரி பகுஜன் சமாஜ் விரைவில் போராட்டம்



  • திருப்போரூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்



  • கும்மிடிப்பூண்டியில் கடைகள் ஒதுக்கக்கோரி சிஐடியு கண்டன கூட்டம்



  • சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு 21ம் தேதி வீடியோ கான்பரன்சிங்கில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு



  • டிஜெஎஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை



  • கடன் தொல்லை, மனைவி பிரிந்த வேதனை 2 மகள்களுடன் தந்தை தூக்கிட்டு சாவு



  • நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேகமாக பரவும் டெங்கு



  • பைக்குகள் மோதல் கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி



  • மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]