இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு
6/3/2025 5:17:22 PM
சென்னை: இந்தியாவின் அதிநவீன ஜிசாட்-19 செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ராக்கெட் மூலம் வரும் 5ம் தேதி மாலை 5.28 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் ஆன ஜிசாட்-19 செயற்கைகோளை வரும் 5ம் தேதி மாலை 5.28 மணிக்கு ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ராக்கெட் மூலம் ஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கவுன்டவுன் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாகும். இந்த ராக்கெட் 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை சுமந்து செல்ல கூடிய திறன் பெற்றது. ஜிசாட்-19 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்படும் பட்சத்தில், இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனை மைல் கல்லாகும் என விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ராக்கெட் இந்திய தொழில் நுட்பத்தால் ஆன கிரயோஜனிக் இன்ஜின் மூலம் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளாகும். இதன் எடை 3,136 கிலோ. இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன கியு பாண்ட் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் தகவல் தொழில்நுட்பம் குறித்து துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த செயற்கைகோள் அதன் சுற்றுவட்ட பாதையில் குறைந்த பட்சம் 170 கி.மீட்டர் அருகிலும், அதிகபட்சம் 35 ஆயிரத்து 975 கி.மீட்டர் தூரம் தொலைவிலும் ராக்கெட் புறப்பட்ட 16வது நிமிடம் 20 வினாடியில் 3 கட்டங்களாக பிரிந்து நிலை நிறுத்தப்படும். ஜிசாட்-19 செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.யான ஆன்டனாக்கள், அதிநவீன கியு பாண்ட் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் தகவல் தொழில்நுட்பம் குறித்து துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த செயற்கைகோள் அதன் சுற்றுவட்ட பாதையில் குறைந்த பட்சம் 170 கி.மீட்டர் அருகிலும், அதிகபட்சம் 35 ஆயிரத்து 975 கி.மீட்டர் தூரம் தொலைவிலும் ராக்கெட் புறப்பட்ட 16வது நிமிடம் 20 வினாடியில் 3 கட்டங்களாக பிரிந்து நிலை நிறுத்தப்படும். ஜிசாட்-19 செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.