இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

6/2/2025 3:48:31 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

கோவை: கோவை அடுத்த போத்தனூர் கணேசபுரம் மூரண்டம்மன் கோயில் வீதியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஒற்றை காட்டு யானை புகுந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஜோதிடர் விஜயகுமார் தனது மகள் காயத்ரி(12) என்பவருடன் வீட்டின் முன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு புகுந்த காட்டு யானை தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் தாக்கியது. இதில் சம்பவ இடத்தில் காயத்ரி பலியானார். தப்பியோட முயன்ற விஜயகுமார் படுகாயமடைந்தார். ஊருக்குள் யானை புகுந்ததை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதை தொடர்ந்து படுகாயமடைந்த விஜயகுமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு ஒரே பதற்றமாக காணப்பட்டது.

பொதுமக்கள் துரத்தியதில் அந்த யானை வெள்ளலூர் பஜனை கோயில் வீதியில் புகுந்தது. இன்று காலை 5.30 மணிக்கு பொதுக்கழிப்பிடத்துக்கு செல்ல நடந்து சென்ற அதே வீதியை சேர்ந்த  நாகரத்தினம்(50), ஜோதிமணி(60) ஆகியோரை தாக்கியது.  படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தனர். இதற்கிடையே யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், கம்பர் வீதியை சேர்ந்த பழனிசாமி(73) ஆகிய இருவரையும் துரத்திச் சென்று தாக்கியது.

அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் துரத்தியதில் அங்கிருந்து தப்பிய யானை வெள்ளலூர் பகுதியில் சுற்றி திரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் ஆயுதபடை காவலர்கள் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியான 4 பேரின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • தவறான ஆபரேஷனால் பெண் சாவு? எஸ்ஆர்எம் மருத்துவமனை முற்றுகை



  • மூன்று அணியாக ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் : தமிழக சட்டசபை ஜூன் 14ல் கூடுகிறது



  • வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை



  • தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது



  • படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு



  • கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு



  • இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு



  • தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது



  • பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு



  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]