இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மக்களுக்கான வளர்ச்சி என்பதை மறந்து விட்டு மத்திய, மாநில பாஜ அரசுகள் வகுப்புவாதத்தை தூண்டுகின்றன : அகிலேஷ் குற்றச்சாட்டு

5/2/2025 5:10:13 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

லக்னோ: மத்திய, மாநில பாஜ அரசுகள் வளர்ச்சியை மறந்து விட்டு மக்கள் மத்தியில் வகுப்புவாத பிரச்னைகளை தூண்டி வருகின்றன என முன்னாள் முதல்வர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி அரசை வீழ்த்தி விட்டு பாஜ வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக மாநில அரசை விமர்சித்து அகிலேஷ் பேசினார்.

நேற்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலேஷ் பேசுகையில், மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மறந்து விட்டு மத்திய, மாநில அரசுகள் வகுப்புவாத பிரச்னைகளை மக்கள் மத்தியில் கிளறி வருகின்றன. ஆர்எஸ்எஸ்,பாஜ அடிப்படை கொள்கையே வகுப்புவாதம்தான். நாட்டையும், ஜனநாயகத்தையும் எந்த திசையில் அவர்கள் இட்டு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ பாஜ அரசு ஒன்றும் செய்யப் போவதில்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் நட்பு கொண்டவர்கள்.

ஆர்எஸ்எஸ், பாஜவை பொறுத்த வரையில் பண பலத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது ஒன்று மட்டும்தான் நோக்கம். ஆனால் மக்களை ஏமாற்றிக் கொண்டு நீண்ட காலத்திற்கு அரசியல் செய்ய முடியாது. சமாஜ்வாடி அரசில் கொண்டு வரப்பட்ட அனைத்து மக்கள் நல திட்டங்களையும் யோகி அரசு புறக்கணித்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் மக்களை தவறான திசையில் பாஜ வழிநடத்துகிறது. சட்டத்தின் ஆட்சி என்பது துளியும் கிடையாது. முழுக்க முழுக்க அராஜக ஆட்சிதான் அனைத்து மட்டத்திலும் நிலவுகிறது என்று அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

மேலும் சில
  • அந்தமானில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி



  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: ஓபிஎஸ் கோரிக்கை



  • தினகரனுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்



  • உ.பி.யில் பசுவுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : இறந்த மகனை தந்தை தோளில் தூக்கி சென்ற அவலம்



  • டிஎஸ்பி மிரட்டல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி



  • காஷ்மீரில் மீண்டும் பாக். அத்துமீறல்: 48 மணி நேரத்திற்குள் 2வது முறையாக தாக்குதல்



  • ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை



  • உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • செருப்பால் அடிக்க வேண்டும் என அரியானாவில் காங். தலைவர்களை அவமதித்து பேசிய பாஜ எம்பி



  • காஷ்மீரில் பதற்றம் எதிரொலி : அனந்தநாக் இடைதேர்தல் ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]