டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது
4/28/2017 2:35:54 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வேடல் கிராமத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 140 பெட்டியில் இருந்த மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வேடல் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி அதை அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.
இதில், தொடர்புடைய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உலியான் (எ) கோவிந்தன் (37), சிவமூர்த்தி (55), ராஜேஷ் (24), மணிகண்டன் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 பெட்டி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.