இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை

4/28/2017 2:21:19 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பாரத் நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (55). இவர், காந்தி நகரில் தனியார் வாட்டர்கேன் கம்பெனியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி கல்பனா (50) மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் பிரபு (28) என்பவருக்கு திருமணமாகி திருவொற்றியூரில் தனியாக குடும்பத்துடன் வசித் வருகிறார். 2-வது மகன் அந்தோணி (23) பெற்றோருடன் வசிக்கிறார்.இந்நிலையில், சண்முகவேலின் மனைவி கல்பனாவும் 2-வது மகன் அந்தோணியும் நேற்றிரவு வீட்டுக்குள் படுத்து தூங்கினர். வீட்டு வராண்டாவில் சண்முகவேல் தனியே படுத்து தூங்கினார்.இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டுவாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக கல்பனா கதவை திறந்தார். அப்போது வராண்டாவில், தனது கணவர் சண்முகவேல் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அலறி சத்தம் போட்டார்.

சண்முகவேலின் கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்துகளுடன் ரத்தம் காய்ந்திருந்தது. கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு மகன் அந்தோணி உட்பட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சண்முகவேலின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து, கம்பெனியில் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது ஏதேனும் சொத்து தகராறா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் செங்குன்றத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சோழவரம் அடுத்த அருமந்தையில் தனியார் பண்ணை ஒன்றில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் காவலாளிகள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: போதையில் தூங்கிய வாலிபரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்: நண்பர் கைது



  • புவனகிரி அருகே அதிகாலையில் துணிகரம்: சென்னை டிரைவரை தாக்கி ரூ.15 லட்சம் கார் கடத்தல்



  • சேலம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை தம்பியின் மைத்துனர் கைது



  • கொரட்டூரில் பரபரப்பு அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



  • கீழ்ப்பாக்கத்தில் காரை மறித்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை; 5 கிலோ வெள்ளியும் அபேஸ்



  • சேலத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து துணிகரம் வியாபாரி வீட்டில் 720 பவுன் கொள்ளை



  • கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது



  • டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது



  • கோயில் உண்டியல் கொள்ளை



  • மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது: போலீசாருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]