இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு

4/12/2025 6:00:39 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுடெல்லி- காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கர்நாடகாவில் சிக்மகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சைத்ரா என்பவர் தனது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர், அமைச்சர், கலெக்டர், நீதிபதி போன்ற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் கார்களில்தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்துவது நடைமுறை. ஆனால் பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சைத்ராயின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய அளவில் அரசியல் கட்சிகள் மத்தியில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வரும் வேளையில் இது அரசியல் கட்சிகள் மத்தியிலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.  ஏற்கனவே விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்கள் யாரும் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தக் கூடாது என்று முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதே போல் தற்போது பஞ்சாபில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கும் இந்த பாணியை பின்பற்றியுள்ளார்.

இதனால் காரில் சிவப்பு விளக்கு பொருத்தும் விவகாரம் தேசிய அளவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக விவாதிக்க மூத்த அமைச்சர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதிக்குள் இது குறித்து மூத்த அமைச்சர்களுடன்  மோடி விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நிதிபதி, மக்களவை தலைவர் ஆகியோரின் கார்களில் மட்டும் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய அரசின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



  • விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது: மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]