இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை - சுமித்ராவிடம் ஓபிஎஸ் அணி எம்பி சுந்தரம் கோரிக்கை

4/12/2025 2:48:43 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுடெல்லி- தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் ஓபிஎஸ் அணி அதிமுக எம்பி பி.ஆர்.சுந்தரம் நோட்டீஸ் அளித்துள்ளார். ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெற இருந்தது. அண்மையில் இது ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.  இந்த சூழலில் அதிமுக அம்மா அணியான தினகரன் தரப்பினர் பணத்தை தண்ணீராக வாரியிறைத்தனர் என பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணைத்திற்கு புகார்கள் பறந்தன. தேர்தல் கண்காணிப்பு படையினரே ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி கையும் களவுமாக பிடித்தனர். இந்த சூழலில் ஆர்.கே.நகர் பண வினியோகம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் கடந்த 7ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் பண வினியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகியவை சிக்கின. இவற்றை கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே. நகர் இடை தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனை சந்தித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுக எம்பி சுந்தரம் இன்று நோட்டீஸ் அளித்தார். மேலும் விஜய் பாஸ்கருக்கு நெருக்கமான கூட்டாளிகளிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சசிகலா அணி தரப்பு எம்பி தம்பித்துரை மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்பி மைத்ரேயன் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என பின்னர் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக விஜய் பாஸ்கர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]