கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்
3/27/2017 3:10:14 PM
கும்மிடிப்பூண்டி- கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நடந்தது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் சி.இஸ்ரவேல், பி.முத்துசாமி, எம்.ஆர்.ஸ்ரீதர், டி.மஸ்தான், எம்.கே.ஏசு ரத்தினம், நிர்மலா பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஏ.கோகுல்நாத் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன், மாவட்ட மீனவரணி நிர்வாகி ஆறுமுகம், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ்சாதிக், முரசொலி மூர்த்தி பேசினர். இதில், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஓ.ஏ.நாகலிங்கம், முன்னாள் திமுக பொறுப்பாளர் வெங்கடாசலபதி, ஊராட்சி செயலாளர் துளசைய்யா, மாணவரணி அமைப்பாளர் வெற்றி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன்பாபு நன்றி கூறினார்.