இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’

12/2/2025 3:20:06 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு

சென்னை, - சென்னையில் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2012-16 ஆண்டுகளில் சென்னையில் கொலை, திருட்டு, ஆதாயக் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 14,551 பேர் குறித்த விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 11,303 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 3,248 பேர் வெளிமாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் செய்த குற்றங்கள் உள்ளிட்ட முழு விவரங்களுடன் ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது. இது, ரோந்து போலீசார் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் செல்போனில் பதிவிறக்கம் ெசய்து தரப்படும். இதன்மூலம், புதிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஏற்கனவே ஏதேனும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களா என எளிதில் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப விரைவில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த திட்டத்தை  வரும் ஜனவரி முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீசார் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் உறுப்பினர்கள் அடங்கிய வாஸ்ட் அப் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ேமலும், சென்னை முழுவதும் தனியார் நிறுவனம், குடியிருப்போர் நல சங்கம் மற்றும் போலீசார் சார்பில் மொத்தம் 27,728 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்ேபாது  மயிலாப்பூரில் 2002, தி.நகரில் 5635, அடையாரில் 4572, அண்ணா நகரில் 2329, திருவல்லிக்கேணியில் 544 சிசிடிவி கேமராக்கள் என, சென்னையில் உள்ள 4 காவல் மண்டலங்களில் 20,995 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6733 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]