Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
07
Mar
தஞ்சை, திருவானைக்காவல், பிரகதீஸ்வரர் கோயில்களில் இன்று விடிய விடிய மகா சிவராத்திரி திருவிழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று மாசி மகாசிவராத்திரியையொட்டி சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இரவு 11மணிக்கு முதல் ஜாமம், 1மணிக்கு 2ம் ஜாமம், 3மணிக்கு 3ம் ஜாம அபிஷேகங்களும், அலங்காரங்களும் வழிபாடுகளும் நடைபெறும். 3ம் கால நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார்கள், நிறைவாக 4ம் ஜாம பூஜை அதிகாலை 5மணிக்கு நடைபெறும். சிவராத்திரியையொட்டி இன்றிரவு முழுவதும் கோயில் நவராத்திரி கலைவிழா அரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும்.

இரவு 8மணி முதல் தீட்சை பெற்ற சிவனடியார்கள், கோயில் கொடிமரமண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபம், 3ம் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் சிவபூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.ஓமாந்தூர்: மண்ணச்சநல்லூர் அடுத்த ஓமாந்தூரில் அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ண சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஜோதி வழிபாடு மட்டுமே இங்கு நடைபெறும். மேலும், இக்கோயில் வளாகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் திருநீறாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் சிறப்பானது. பாரம்பரியமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தி திதி, திருவோண நட்சத்திரம் கூடிய புண்ணிய காலத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்தாண்டுக்கான மகா சிவராத்திரியையொட்டி இன்று காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்கியது. கோயிலில் உள்ள 64 பதிவுகளிலும் பெரிய பூசாரி தேவராஜ் ஜோதி ஏற்றி வழிபாட்டை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சவுதாரி அம்மனுக்கு நள்ளிரவு பொங்கல் வைத்து நிவேதனம் படைக்கப்படுகிறது. பின்னர், நாளை (8ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு நாச்சியாரம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க சீர் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். 64 புது பானைகளில் செய்யப்பட்ட சுண்டல் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அத்துடன் பேய் ஓட்டும் சடங்கும் நடைபெறும். உடுக்கு அடித்து பேய் விரட்டும் பூசாரிகள், குறி சொல்வோர், கிளி ஜோதிடம் பார்ப்போர், கைரேகை நிபுணர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

இங்கு வந்து ஏகாம்பரேஸ்வரரை வணங்கி திருநீராக கோயில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசினால் ஆண்டு முழுவதும் அவர்கள் தொழில் சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவசுவாமி கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களில் நள்ளிரவு நான்கு ஜாமங்களிலிலும் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறஉள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு ஓமாந்தூர், திருவானைக்காவல் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.தஞ்சை: தஞ்சை பெரியகோயில் உள்பட அனைத்து சிவாலயங்களிலிலும் நான்கு ஜாம பூஜைகள் விடிய விடிய நடைபெற உள்ளது.அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு ஜாமபூஜைகள் நடைபெற உள்ளது.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement