பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கிய போதை போலீஸ் கைது- திருவனந்தபுரம் அருகே பரபரப்பு
திருவனந்தபுரம், -திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கலில் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக திருவனந்தபுரம் ஆயுதப்படையை சேர்ந்த ஸ்ரீ னிவாசன் (44) உட்பட 50 போலீசார் பாதுகாப்புக்காக சென்றிருந்தனர். உம்மன்சாண்டி அந்த விழாவில் கலந்துகொள்ளாததால் போலீசார் அனைவரும் முகாமுக்கு திரும்பி சென்றனர்.போலீஸ்காரர் ஸ்ரீ னிவாசன் அங்குள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. போதை ஏறியதும் ரகளையில் ஈடுபட்ட அவர், சாலையில் சென்ற மக்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்க தொடங்கினார்.இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்றிங்கல் போலீசார் சென்று ஸ்ரீ னிவாசனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரையும் சரமாரி தாக்கினார். ஒருவழியாக ஸ்ரீ னிவாசனை மடக்கிப்பிடித்தனர். அவரை ஜீப்பில் ஏற்ற முயன்றபோது ஒரு கல்லை எடுத்து ஜீப்பை தாக்கினார். இதனால் ஸ்ரீ னிவாசனின் கையில் விலங்கு போட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.