மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை அரசு பரிசீலிக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
சென்னை: சமக தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை:மாற்றுத்திறனாளிகளான பார்வையற்றோர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு, படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை அதிகப்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்று சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்வையற்றோர்க்கு பணிகளை வழங்குவது, சிறப்பாசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஏற்கக்கோரி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு நாம் உதவாவிட்டால் யாரால் உதவமுடியும். அவர்கள் கோரிக்கையை நன்கு பரிசீலித்து நிறைவேற்றித்தர வேண்டுமென தமிழக அரசை சமத்துவமக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.