மத்திய தொழிலக
பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 700 ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கான
காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு :
7.3.2025 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அரசு
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி.
தட்டச்சு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35
வார்த்தைகளும் இந்தியில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய
வேண்டும்.
உடல் தகுதி:
உயரம்
குறைந்தபட்சம் 165 செ.மீ., இதற்கு நிகரான எடை இருக்க வேண்டும். பெண்கள்
155 செ.மீ. உயரமும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.50/ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்ச்சி முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை, பிஸிக்கல் ஸ்டாண்டர்ட் டெஸ்ட், டாக்குமென்ட் வெரிபிகேஷன்.
ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு பாடத் திட்டம்:
1. Number of Question : 100
2. Maximum Marks : 100 Marks
3. Question paper type : Objective
4. Question paper Subjects : General Intelligence, General Studies/Elementary science, General English or Hindi and Arithmetic
5. Total Duration: 02 hours (120 minutes)
6. Minimum Qualifying score : 33% for SC/ST and 35% for OBC/others
விண்ணப்பிக்கும் முறை:
பரிந்துரைக்கப்பட்ட
படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை
சேர்த்து உரிய மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.