விரிவாக்க பணிகளுக்காக திருச்சி விமான நிலையத்துக்கு தமிழக அரசு 510 ஏக்கர் இடம்
திருச்சி: திருச்சி விமான நிலைய இயக்குனர் நேகி கூறியதாவது:திருச்சி விமான நிலை யம் ரன்வே விரிவாக்கத்துக்காக, 510 ஏக்கரை தமிழக அரசு இலவசமாக தரும் என மாநில போக்குவரத்து முதன்மை செயலாளர் பிரபாகர் ராவ் தெரிவித்தார். 8,000 அடி நீளம் உள்ள ரன்வே, 9,000, 11,000 என படிப்படியாக, 12,500 அடி நீளமாக விரிவாக்கம் செய்யப்படும். புது முனையத்தில் 200 பயணிகள் வரவும், 200 பயணிகள் செல்லவும் முடியும். விரைவில் 800 பயணிகளை கையாளும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி விமான நிலை யம் வழியாக பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 2012-13ல் ஆண்டுக்கு 9 லட்சமாக இருந்தது. 2013-14ல் 10 லட்சமாக உயர்ந்துள்ளது. சரக்கு முனையத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 63 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் தானியங்கி பருவ கட்டுப்பாடு மையம் (மெட்பார்க்) அமைக்கப்பட உள்ள 50 விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. ‘மெட்பார்க்‘ வந்தால் பருவ நிலை குறித்து பைலட் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.