சென்னை: எம்ஜிஆர் நகர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பிரபு சிக்கன் சென்டர் என்ற பெயரில் சிக்கன் கடை நடத்தி வருகிறேன். மயிலாப்பூரில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றிற்கு கடந்த பல வருடங்களாக சிக்கன் சப்ளை செய்து வருகிறேன். ஓட்டலின் உரிமையாளர்கள் கடந்த ஒரு வருடமாக பணம் சரியாக தரவில்லை. இதன்படி 16 லட்சத்து 25 ஆயிரம் பாக்கி தர வேண்டி உள்ளது. இதே போல் பலர், காய்கறி, பால் உள்ளிட்ட பல பொருட்கள் ஓட்டலுக்கு வினியோகம் செய்ததனர். அவர்களுக்கும் பணம் திரும்பி வரவில்லை. மொத்தம் 93 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.பாதிக்கப்பட்ட மன்னடி , சைதாப்பேட்டை, ஜேஜேநகர், முகப்பேர் உள்ளட்ட பகுதிகளை சேர்ந்த 11 பேர் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை புகார் மனு அளித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.