ஆவி ஷூட்டிங்கில் அசம்பாவிதம் படக்குழு நடுக்கம்
சென்னை: ஆவி பட ஷூட்டிங் நடந்தபோது அசம்பாவிதம் நடந்தது என்றார் இயக்குனர்.சவுந்தர், சுருதி நடிக்கும் படம் ‘சாம்பவி. இதுபற்றி இயக்குனர் எஸ்ஆர்எஸ் கூறியது:பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து, அவளையும், அவள் குடும்பத்தையும் எரித்து கொல்கிறான் ஹீரோ. ஆவியாக வரும் அப்பெண் ஹீரோ குடும்பத்தை அழிக்க முயல்கிறாள். அது நிறைவேறுகிறதா என்பது கிளைமாக்ஸ். ஆவி கதை என்றாலும் பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. ஆனால் ஆவி காட்சியை படமாக்கும்போதெல்லாம் யாருக்காவது ஒருவருக்கு அடிபட்டுக்கொண்டே இருந்தது. ஒரு பானையில் ஆவியை அடைத்து அதை சிறுவன் எடுத்துச் செல்லும் காட்சி படமாக்கியபோது சிறுவன் மயங்கி விழுந்துவிட்டான். அவனை எழுப்புவதற்காக சென்ற சிறுவனும் மயக்கம் அடைந்தான். இப்படி நடந்தது ஏன் என்று தெரியவில்லை. படக்குழு பயந்தபடி உள்ளது. ரம்யா, ராணி, நெல்லை சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். மித்ரன்&பகவதி பாலா ஒளிப்பதிவு. இ.ஸ்ரீதர் இசை. ஜே.சவுந்தர்ராஜன் தயாரிப்பு.