இந்தியாவிலுள்ள விவசாய பல் கலைக்கழகங்கள் மற்றும் விவசாய கல்லூரிகளில் விரிவுரை யாளர் மற்றும் உதவி பேராசிரியராக பணி புரிய விரும்பும் விவசாயத் துறை யைச் சேர்ந்த பட்டதாரிகள் அதற்குரிய நெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்திய விவசாய ஆராய்ச்சி பணி தேர்வு வாரியத்தால் (ஏஎஸ்ஆர்பி) நடத்தப்படும் தேர்வுக்கு தகுதி யானவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: விவசாயத்துறை/கால்நடைத்துறை/மீன்வளத்துறை/ மண்வளம்/ நீர் மேலாண்மையியல்/உயிர் அறிவியல் துறைகளைச் சார்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம். இத்தகுதியை 2012 ஆக.1க்குள் பெற்றிருக்க வேண்டும். விவசாயம் உள்பட மேற்கண்ட துறைகளை சார்ந்த பாடப் பிரிவுகள், பாட உட் பிரிவுகள், பாடப் பிரிவிற்கான கோடு விபரம் www.asrb.org.in என்ற இணையதளத்தில் Annexure IIல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வயது: 1.8.2025 தேதிப்படி 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு கிடை யாது. விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவு- ரூ.1000/- ஓபிசி பிரிவு- ரூ.500/- எஸ்சி/எஸ்டி/பி.எச்., பிரிவினர் ரூ.250/- கட்டணத்தை The Secretary, ASRB, New Delhi என்ற பெயருக்கு வங்கி காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். காசோலையின் பின்பக்கம் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் அனைத்து விவரங்களுக்கும் www.icar.org.in அல்லது www.asrb.org.in இணையதளங்களை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Secretary, Agricultural Scientist Recruitment Board, Krishi Anusundhan Bhavan, Pusa, New Delhi 110 012. தேர்வு நடைபெறும் நாள்: 2013, ஜன.20. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.20.