Untitled Document
2011
15
Mar
ஆதர்ஷ் ஊழல் : மாஜி கமிஷனர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மும்பை: ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக மும்பை மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். மும்பையின் கொலபா பகுதியில் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பத்துக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம் 31 மாடி குடியிருப்புகளை கட்டியது. அதில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த பல்வேறு முறைகேடுகள், கடந்த நவம்பர் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. கட்டிடம் கட்டப்பட்டதிலும் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தனது உறவினர்களுக்கு வீடு ஒதுக்கிய விவகாரத்தில், அப்போதைய முதல்வர் அசோக் சவான் பதவியை பறிகொடுத்தார். மேலும் பல ஆதர்ஷ் சங்க மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ உயரதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி 26ம் தேதி, இந்த ஊழல் பற்றி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. அசோக் சவான் உள்பட 13 பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் ஜெய்ராஜ் பதக்கின் டெல்லி, மும்பை மற்றும் புனே வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதர்ஷ் குடியிருப்பு கட்டியபோது இவர்தான் மும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்தார். இவர் மீது கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க, தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் தற்போது அரசு நிறுவனமான ஊரக மின் கழகத்தின் சேர்மனாக இருக்கிறார். எனவே இவரிடம் விசாரணை நடத்த மத்திய மின்சார அமைச்சகத்தின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me