திருவொற்றியூர் :திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர், கடந்த மாதம் 2ம் தேதி திருவொற்றியூர் தேரடியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கருடன் தகராறு ஏற்பட்டது. இதில் பாஸ்ருக்கு ஆதரவாக திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் (28) பேசியுள்ளார். இதனால் சரவணனும், கார்த்திக்கும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், சரவணன் காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், அவரது நண்பர்கள் பாண்டியன், சத்யராஜ், ரவீந்திரன், கிஷோர், செந்தில் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பியான கே.பி.சங்கரின் சகலை என தெரிந்தது. இந்நிலையில் கைதான 6 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் திரிபாதியிடம் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி பரிந்துரை செய்தார். கமிஷனரின் உத்தரவின் பேரில் நேற்று, வேலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்த 6 பேரையும் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கே.பி.சங்கர், தலைமறைவாக உள்ளார். அவர், 5வது வார்டு கவுன்சிலர்
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook