புனே அணிக்கு புது சிக்கல்
ஐபிஎல்லில் புனே அணி 11 ஆட்டத்தில் ஆடி 7 தோல்வி, 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளது. இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகம் தான். நாளை இந்த அணி கொல்கத்தாவை எதிர்த்து ஆட உள்ளது. ஈடர்ன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. இதற்கிடையே நாளை ஆட்டம் மழை காரணமாக ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நாளைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அந்த நிலை ஏற்பட்டால் எஞ்சிய 4 ஆட்டங்களிலும் அதிரடி வெற்றிகளை புனே அணி குவித்தாக வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான் புனேயின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரியவரும்.