Untitled Document
2012
19
Mar
அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப் கடத்திய 2 வாலிபர்கள் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பொன்னேரி : மீஞ்சூர் அருகே அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப்களை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சாரம் கட்ட வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து அனல்மின் நிலைய மேலாளர் சிலம்பரசன், மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ லாரன்ஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.இந்நிலையில், மீஞ்சூர் அருகே பூங்கமேடு பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது இரும்பு பைப் ஏற்றி வந்த ஆட்டோவை மறித்து விசாரித்தனர். அனல்மின் நிலையத்தில் இருந்து இரும்பு பைப்களை திருடி வந்தது தெரிந்தது. ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இரும்பு பைப் கடத்திய மணலியை சேர்ந்த ராஜீவ் காந்தி (26), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பத்மநாபன் (23) இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,