திருத்தணி அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலி
திருத்தணி : திருத்தணி அருகே இருளர் காலனியை சேர்ந்த சிறுவன், டிராக்டர் மோதி இறந்தான். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருத்தணி அருகே கூலூர் இருளர் காலனியை சேர்ந்தவர் எல்லையன். இவரது மகன் செல்லையன் (6), ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை காலனி பகுதி அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, சிறுவன் மீது மோதியது. அந்த இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.விபத்தை பார்த்ததும் இருளர்கள் ஓடிவந்தனர். டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். இதுகுறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். டிராக்டர் டிரைவர் காஞ்சிப்பாடியை சேர்ந்த காந்தி (33) கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.