புரட்சி பாரதம் செயல்வீரர்கள் கூட்டம்
திருத்தணி : திருவள்ளூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் திருத்தணியில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ஜான், செயலாளர் ரகுநாதன், மாவட்ட அமைப்பாளர் செல்வம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கிரிஸ் முன்னிலை வகித்தனர். திருத்தணி நகர தலைவர் சிவா வரவேற்றார்.இலங்கை அரசை கண்டித்து ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பனகல் பார்க் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, அம்பேத்கர், மூர்த்தி, ஜெகன் மூர்த்தி பிறந்தநாள்களை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவெடுத்தனர்.கூட்டத்தில், மாநில இளைஞரணி தலைவர் ஜி.மகா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் பழனி, கமலக்கண்ணன், பிரகாஷ், ரவிக்குமார், முனுசாமி, சண்முகம், முருகன், கிருபாகரன் கலந்துகொண்டனர்.