Untitled Document
2012
25
Feb
வேளச்சேரி என்கவுன்டரில் ‘திடுக்’ திருப்பம் எங்கள் பிள்ளை கொள்ளை கும்பல் தலைவனா? பீகாரில் இருந்து வந்த குடும்பத்தினர் கதறல்


சென்னை : சென்னை வேளச்சேரியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை போலீசார் நடத்திய என்கவுன்டரில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள் மூலம், அவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. அடையாள அட்டையில் இருந்த முகவரியில் விசாரித்தபோது, அங்கு அதே பெயரில் வேறு நபர்கள் இருப்பதும் போலீசார் கைப்பற்றியது போலி அடையாள அட்டைகள் என்பதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்ட வினோத்குமார் என்பவனின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் அடிக்கடி பேசப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டனர். கொள்ளையனின் உறவினர் ஒருவர் பேசினார். என்கவுன்டர் நடத்தப்பட்டது பற்றி அவரிடம் கூறிய போலீசார், சென்னை வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத்குமார் என்று அடையாளம் காணப்பட்டவனின் அப்பா, சித்தப்பா, தங்கை 3 பேரும் நேற்று நள்ளிரவு விமானத்தில் சென்னை வந்தனர். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். கமிஷனரிடம் அவர்கள் கூறியதாவது: எங்கள் மகன் பெயர் அஜய்குமார் ராய். அவனை நண்பர்கள் எல்லோரும் வினோத்குமார் என்றுதான் அழைப்பார்கள். அஜய்குமார், நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தான். பிசினஸ் விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி நண்பர்களுடன் செல்வான்.

இப்போதும் அவன் பிசினஸ் விஷயமாகத்தான் சென்றுள்ளான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். போலீசார் சொன்ன பிறகுதான் விஷயம் தெரிந்தது. எங்கள் மகன் நல்லவன். எப்போதும் தவறான வழிக்கு செல்ல மாட்டான். அவனை யாரோ தவறான வழிக்கு மாற்றியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில், அஜய்குமாரின் இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. மணிக்கட்டுக்கு கீழே கை சேதம் அடைந்திருந்தது. வலது கை மட்டுமே முழுமையாக செயல்படும். என்கவுன்டரில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கூறி கதறி அழுதனர். சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற 4 பேரை பற்றி போலீசார் விசாரித்தபோது, ‘அவர்களை நாங்கள் பார்த்தது கிடையாது’ என்றனர். மூன்று பேரும் இன்று காலை அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்த வினோத்குமார் என்ற அஜய்குமாரின் உடலை பார்த்து அடையாளம் காட்டினர். அவர்கள் சொன்ன அடையாளங்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. இடதுகை விரல் துண்டிக்கப்பட்டிருந்தது. அஜய்குமாரின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மற்ற 4 கொள்ளையர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் போலி என்பதால், கொள்ளையர்களின் உறவினர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க தி.நகர் உதவிகமிஷனர் தமிழ்செல்வன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்றிரவு பீகார் புறப்பட்டு சென்றுள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
abu - chennai
2/25/2012 -- 13:34:5

nandri

NITHY - CHENNAI
2/25/2012 -- 15:34:7

தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் பயபடுவர்கள். தி POLICE........ VETTAI THODARATUM. VAIMAYE VELLUM.

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,