காஜல் அகர்வால் கூறியது: தமிழில் வெளியான ‘சிங்கம்’ இந்தியில் உருவாகிறது. தெலுங்கில் நான் நடித்த ‘மகதீரா‘ படத்தை பார்த்துதான் இப்படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் ரோகித் ஷெட்டி. அஜய்தேவ்கன் ஹீரோ. இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறேன். இந்தியில் நடிப்பதால் மூட்டை முடிச்சிக்கட்டிக் கொண்டு காஜல் அகர்வால் புறப்பட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்தியில் நடிப்பதால் தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று அர்த்தமி ல்லை. எனக்கு இந்தி பேச தெரியும். நல்ல வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். தென்னிந்திய படங்களில்தான் அதிகம் கவனம். எந்த மொழியாக இருந்தா லும் ஹீரோ, டைரக்டருடன் சுமூகமான கெமிஸ்ட்ரி இருந்தால்தான் காட்சி சிறப்பாக இருக்கும். அனுபவம் வாய்ந்த ஹீரோக்களுடன் நடிக்கும்போது கெமிஸ்ட்ரி பற்றி கவலை இல்லை. கொஞ்சம் தடுமாறினாலும் அவர்கள் சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். அதிர்ஷ்டவசமாக நான் ஜோடி போட்ட ஹீரோக் கள் திறமையானவர்கள். மற்ற ஹீரோக்களுடன் நடிக்கும்போது புரிதல் இருக்க வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook