டைரக்டர் செல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்துக்கு பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் இயக்கி முடித்தார் செல்வா. இதையடுத்து ‘இரண்டாம் உலகம்’ பட இயக்கத்தில் பிஸியானவர் திடீரென்று கீதாஞ்சலியிடம் மனதை பறிகொடுத்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இக்காதல் பற்றி வாய் திறக்காமல் இருந்த மாஜி மனைவி சோனியா அகர்வால் கூறியதாவது: செல்வராகவன் மறுமணம் செய்வதைத் தொடர்ந்து நானும் மறுமணம் செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் இப்போது இல்லை. 3 வருடம் கழித்து முடிவு செய்வேன். இதற்கிடையில் ‘வானம்‘ படத்தில் நடிக்கிறேன். மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகி இருப்பதால் நடிப்பில்தான் எனது கவனம் முழுவதும் இருக்கிறது. செல்வாவுக்கும், கீதாஞ்சலிக்கும் எனது வாழ்த்துக்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook