மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு
மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 7,985 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாசனத்துக்காக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரிப்பு மற்றும் பாசன நீர் திறப்பு குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் அணையின் நீர்மட்டம் 103.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.85 டி.எம்.சி.