நயன்தாரா திடீர் விளக்கம் : பிரபுதேவாவுடன் காதல் முறியவில்லை!
சென்னை: ‘ பிரபு தேவாவுடனான காதல் முன்பைவிட உறுதியாகி இருக்கிறது. எங்களுக்குள் பிரிவு ஏற்படவில்லை. விரைவில் திருமண தேதி அறிவிப்போம் என்று நடிகை நயன்தாரா கூறினார். நடிகை நயன்தாரா, பிரபு தேவாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதனால் கோலிவுட்டில பரபரப்பு ஏற்பட்டது. பலர் பிரபு தேவா, நயன்தாராவை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரித்தனர்.
இதுகுறித்து நயன்தாரா இன்று கூறுகையில், ‘பிரபுதேவா உடனான என் உறவு நிலையாக உள்ளது. முன்பைவிட இப்போது சந்தோஷமாக இருக்கிறோம். கடந்த சில மாதங்களாக அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். நாளுக்கு நாள் எங்களுக்குள் நெருக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஆனால், எங்கள் காதல் முறிந்துவிட்டதாக வதந்தி பரவி இருக்கிறது. அதில் உண்மை இல்லை.
எங்கள் திருமணம் மற்றவர்களுக்கு பெரிய பிரச்னையாக தெரிகிறது. திருமணம் எப்போது என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம் என்றார்.
இதற்கிடையில் மும்பையில் இந்தி பட ஷூட்டிங்கில் இருந்த பிரபு தேவாவிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.