| |||||
|
2011
31
Jul ![]() மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால், அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும், வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்க வேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
7/31/2011 -- 15:15:31 மனிதன் செத்தால், ஆவியாக அலைவானாம். ஆடுகள் செத்தால் அவை ஆவியாக அலைவதில்லையாம்.. என்னய்யா ஊர் நியாயம் இது? கோட்டை முனியப்ப சாமிக்கு பிடித்த கறிசோறு, பக்தர்களுக்கும் பிடித்தம் தான். ஆடுகளை வெட்டும்போது, அவை எழுப்பும் கூக்குரல் பயத்தை உண்டாக்கும். அதனால் தான், பெண்களை இரவு நேரத்தில் கோவிலுக்குள் அனுமதிப்பதில்ல .பூச்சி வடிவம் எடுக்கும் வல்லமை படைத்த ஆவிகளுக்கு, மனித வடிவம் எடுக்க ஏன் பயம்? உயிரோடு இருக்கும் போது இவர்களிடம் மாட்டி கொண்டு பட்ட கஷ்டம் போதும் என்று பயந்து விட்டார்கள் போல் தெரிகிறது. மீதியாகும் கறியை, மண்ணில் புதைப்பது கருப்பசாமி ஸ்பெஷல். பெரும்பாலும் குலதெய்வமாக கருப்பணசாமி, முத்தையா சாமி, கருப்பசாமி கும்பிடுபவர்கள் தான் வழிவழியாக இந்த பழக்கத்தில் உள்ளார்கள். இரவில் கறியை வெளியே எடுத்து போனால், துர்தேவதைகள் பின் தொடரும் என்ற பயம் தான் காரணம். .மது குடித்தால், துர்மரணம் என்று பயம் காட்டினால், குடிக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையில் இப்படி சொல்லியிருப்பார்கள். பங்காளிகள் மட்டும் தான் கறி சோறு தின்ன முடியும். மற்றவர்களை இவர்கள் மட்டன் சாப்பிட, அனுமதிப்பதில்லை. இதில் பெரிய ஹைலைட் என்னவென்றால், மருளாடி யாருக்கும் தெரியாமல் ஒரு பெக் ஏற்கனவே உள்ளே ஏத்தி இருப்பார். அப்போது தான், களைப்பு தெரியாமல் இவர்களால் சாமி ஆட முடியும். இது, நான் கண்கூடாக கண்ட உண்மையாகும். தண்ணி அடிக்காதே என்பது ஊருக்கு தான் உபதேசம். கோட்டை கருப்பசாமி, எப்படியோ தன்னை நம்பும் பக்தர்களை கைவிடாமல் இருந்தால் சரி. kumar - chennai
6/4/2025 -- 11:20:18 ஆவி இருப்பது உண்மை தான்.
|
|