கார் கவிழ்ந்து திமுக பிரமுகர், மனைவி பலி
குன்னூர்: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் திமுக பிரமுகரும் அவரது மனைவியும் பலியானார்கள். குன்னூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத்(58). இவர் நீலகிரி மாவட்ட திமுக விவசாய துணை அமைப்பாளராக இருந்தார். இவரது மனைவி மீனாட்சி(55). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துவரும் கடைசி மகளை பார்க்க பிரேம்நாத், மனைவி மீனாட்சியுடன் காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து குன்னூருக்கு புறப்பட்டனர்.
இரவில் குன்னூர் காட்டேரி பூங்கா அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். குன்னூர் போலீசார் சென்று சடலங்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேம்குமார் உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.