நயன்தாரா படத்தில் நடிக்க சிம்புக்கு டாப்ஸி போட்ட கண்டிஷன்
சென்னை: சிம்பு படத்தில் நடிக்க டாப்ஸி போட்ட கண்டிஷன் பற்றி இப்போது தெரியவந்துள்ளது.சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் கவுரவ தோற்றமாக டாப்ஸி நடிக்கிறார். இந்த வேடத்துக்கு பலரை கேட்டு, கடைசியில் டாப்ஸி ஒப்பந்தமானார். இதில் நடிக்க டாப்ஸி ஒரு கண்டிஷன் போட்டாராம். அதாவது, படத்தில் நயன்தாராவும் இருப்பதால் அவருடன் எந்த காட்சியிலும் தான் நடிக்க முடியாது என டாப்ஸி சொன்னதாக கூறப்படுகிறது. காரணம், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா டாப்பில் இருக்கும்போது, டாப்ஸி என்டர் ஆனார். டாப்ஸிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தன. மீடியாவினர், டாப்ஸியின் வளர்ச்சி பற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, யார் அவர் என்கிற தொனியில் நயன்தாரா பேசிவிட்டாராம். இதனால் அப்போது முதலே டாப்ஸிக்கும் நயன்தாராவுக்கும் பனிப்போராம். எனவே, நயன்தாராவுடன் எந்த காட்சியிலும் நடிக்க மாட்டேன் என சொல்லித்தான் ‘இது நம்ம ஆளு’ படத்தில் டாப்ஸி நடிக்கிறாராம்.