எந்த ஹீரோவுடனும் டேட்டிங் சென்றதில்லை
சென்னை: கிசு கிசுக்களில் சிக்காதது எப்படி என்பதற்கு பதில் தந்தார் இலியானா.அவர் கூறியது:நடிகர், நடிகைகளை பற்றி கிசு கிசு பரப்புவது சிலருக்கு வாடிக்கை. என்னை பற்றியும் அதுபோல் வதந்தி பரப்ப நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெறவில்லை. அதற்கு பலமான காரணம் உண்டு. ஷூட்டிங் முடிந்தால் வீடு, வீடு விட்டால் ஷூட்டிங். இதுதான் எனக்கு தெரியும். பார்ட்டி, விழா என எங்கும் செல்வதில்லை. இதுவரை எந்த ஹீரோவுடனும் டேட்டிங் சென்றதில்லை. அதனால்தான் கிசு கிசுவில் சிக்காமல் தப்பித்து வருகிறேன். இனியும் சிக்க மாட்டேன். எனக்கு திருமணம் மீது நம்பிக்கை உள்ளது. அதற்கான நேரம் வரும்போது அது நடக்கும். அப்போது உலகம் அறிய என்னவரை கரம் பிடிப்பேன். அப்போது அவர் யார் என்பது இந்த உலகுக்கு தெரிந்துவிடும். அதற்கு முன்பாக, இவர்தான் அவர் என அடையாளம் காட்ட விரும்பவில்லை. இப்போது இந்தியில் சைப் அலிகான் ஜோடியாக ஹேப்பி எண்டிங் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில்தான் நடக்கிறது.