கொடியேற்றத்துடன் தொடங்கியது பழநியில் பங்குனி உத்திர திருவிழா:13ம் தேதி தேரோட்டம்
பழநிபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்
வருவார்கள். இந்தாண்டு திருவிழா இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை வள்ளி, தெய்வானை
சமேத முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர், வீரபாகு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கொடிமரம் முன்பு மங்கள
வாத்தியங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடி ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பினர்.
வரும் 12ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி&தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில்
வெள்ளி ரதத்தில் சுவாமி சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி
13ம் தேதி நடக்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப் பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் உலா
வரும் நிகழ்ச்சி நடக்கிறது. குடமுழுக்கு நினைவரங்கில் பக்திச் சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட
கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.