.படத்துக்கு ‘நம்பர்’ டைட்டில் வைத்தால் ரசிகர்களை கவரும் இயக்குனர் சொல்கிறார்
சென்னை:தமிழ் படங்களில் வித்தியாசமான பெயர் வைப்பதாக ‘உ’, ‘ஐ’, ‘ஈ’ என்று டைட்டில் வைக்கின்றனர். அதேபாணியில் தனுஷ் நடிக்க ஐஸ்வர்யா இயக்கிய படத்துக்கு ‘3’, பரத் நடித்த
படத்துக்கு 555’, ஷாம் நடித்த படத்துக்கு ‘12 பி’, ‘6’ என்றும் பெயரிட்டனர். அதேபோல் புதுமுகங்கள் நடிக்கும் புதிய படத்துக்கு ‘3க்கு அப்புறம் 4’ என‘பெயரிடப்பட்டிருக்கிறது. பி.ஆர்.சிவகுமார் இயக்குகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது,
கமர்ஷியல்படம், மசாலா படம், காதல் சொல்லும் படம் என்று சொல்லி டைட்டில் வைத்து அலுத்துவிட்டது. வித்தியாசமான கதை என்பதும் வழக்கமான வார்த்தையாகிவிட்டது. எண்களை மையமாக
வைத்து டைட்டில் வைத்தால் ஒரு முறைக்கு இரண்டு முறை அதை திரும்பி பார்ப்பார்கள். அது அவர்களை தியேட்டருக்குள் இழுத்து வரும். எனவேதான் இப்பெயர் வைக்கப்பட்டது. இதன் கதைக்களம் இளைஞர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோக்களாக லிங்கேஷ், லட்சுமண், ஹீரோயினாக பிரீத்திதாஸ் அறிமுகமாகின்றனர். மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரசாத் இசை. தெய்வக்கனி சந்திரகுமார், வள்ளி ராஜாபாதர் தயாரிக்கின்றனர். உதயகுமார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு‘ என்றார்.