உக்ரைனில் விபத்து பஸ் மீது ரயில் மோதி 14 பேர் நசுங்கி சாவு
கீவ்:உக்ரைனில் மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள பெலானி நகரில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.
அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடந்த போது, வேகமாக வந்த ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது மோதியது. இதில் மினி பஸ் நொறுங்கி சிதறியது. பயணிகள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மினி பஸ்சின் டிரைவர், ரயில் வரும் சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.