மத்திய
அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில்
58 சப்&இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ள ஆண்கள்,
பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்):
58
இடங்கள் (பொது - 26, ஒபிசி - 13, எஸ்சி - 11, எஸ்டி - 8). சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 30க்குள். எஸ்சி,
எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,
முன்னாள் ராணுவத்தினர்/ மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைப்
படியும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ.
உடற்தகுதிகள்:
ஆண்கள் - 165 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 160 செ.மீ). பெண்கள்: 157 செ.மீ., மார்பளவு: ஆண்கள் 76 முதல் 81 செ.மீ.க்குள் இருக்க வேண்டும். 20 வயதிற்கும் குறைவானவர்களுக்கு 2 செ.மீ., சலுகை வழங்கப்படும்.
எடை:
ஆண்கள் - உயரம் மற்றும் வயதிற்கேற்ப எடை இருக்க வேண்டும். பெண்கள்- குறைந்தபட்சம் 46 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.
பார்வைத்திறன்: கண்ணாடி அணியாத நிலையில் 6/6, 6/9 என்ற அளவில் இருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன்தேர்வு, மருத்துவதகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வுக் கட்டணம்:
ரூ.50. DIG & COMMANDANT, STC, BSF என்ற பெயருக்கு Bangalore, SBI AFS Yelahanka (கோடு எண்:2187)ல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.