திருப்பதியில் நடந்த திருமண பரபரப்பு
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
கோலிவுட், பாலிவுட் பாணியில், மல்லுவுட்டிலும் இரண்டாம் பாகம் மோகம் பரவிடுச்சாம்... பரவிடுச்சாம்... மம்மு நடிகர், லால் நடிகர் நடிக்கற படங்கள் உள்ளிட்ட, டஜன் படங்கனை செகண்ட் பார்ட் தயாரிக்க முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்... விஷயத்தை கேள்விப்பட்ட ஹீரோயின் கள், போட்டிப் போட்டு மல்லுவுட் ஹீரோக்களுக்கு போன்போட்டு
நலம் விசாரிக்கிறாங்களாம்...
விசாரிக்கிறாங்களாம்...
விருது பங்ஷனுக்கு வந்த நடிகருங்க, விருதை வாங்குன அடுத்த நிமிஷமே எஸ் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... இதை கவனிச்சிட்டிருந்த குஷ் நடிகை, உர்ராயிட்டாராம்... உர்ராயிட்டாராம்... ‘அவார்ட் வாங்க வர்ற ஆர்டிஸ்டுங்க கொஞ்சம் கூட டீசன்ட் இல்லாம இப்படியா பாதிலேயே எழுந்துபோறது. இன் னொரு முறை இப்படி பண்ணாம பங்ஷன் முடியறவரை இருக்கறதுதான் மரியாதை’ன்னு கோபமா அட்வைஸ் பண்ணினாராம்...
பண்ணினாராம்...
மழை நடிகை கல்யாண கோலத்துல ஏழுமலையானை தரிசிக்க மலைக்குப் போனாராம்... போனாராம்... அவரை பாத்தவங்கெல்லாம் அம்மணிக்கு சீக்ரெட் மேரேஜ் நடக்குதுன்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்... பிறகு, விளம்பர ஷூட்டிங்குக்காக கல்யாண
கோலத்துல நடிகை
வந்திருக்கார்ன்னு
சொன் னப்பறம்தான்
பரபரப்பு அடங்குச்சாம்... அடங்குச்சாம்...