Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
17
Jan
முடி உதிரும் பிரச்னைக்கு தீர்வு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.  முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார்.
தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம். தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம். ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி, ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச் னை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்னை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண் ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்னையை தீர்க்க முடியாது. முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப் போதும் வறட்சியாக காணப் படும். நுனிப்பகுதி வெடிக்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம் பிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம். பாதுகாப்பு முறை: ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். அதேபோல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வாய்ப்புள்ளது. எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு தொடங் கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்னை சிலருக்கு ஏற்படுகிறது. எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும்.  வாரத்துக்கு மூன்று முறை யாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக் கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம். முடியை மென்மை யாக கையாள வேண்டும்.  இயற்கை யான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது.
முடி உதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் அதையும் சரி செய்யவும். முக்கியமாக டென்ஷனைக் குறைக்க வேண்டும். தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.-ஸ்ரீதேவி

குடைமிளகாய் சட்னி: குடைமிளகாய் 4 எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொடித்த நிலக் கடலை, துருவிய தேங்காய் 4 டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் புளி விழுது, சீரகம் சேர்த்து அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை நன்றாக வதக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள் 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த கலவை சேர்த்து வதக்கி கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இந்த சட்னியில் தேவையான அளவு இரும்புச் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

ரெசிபி

கொத்தமல்லி சாதம்:
வேகவைத்த சாதம் 2 கப், துருவிய கேரட் அரை கப், நறுக்கிய பீன்ஸ் அரை கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத் தமல்லி ஒரு கப் எடுக்கவும். சீரகம், கடலைப்பருப்பு, மிளகு தலா ஒரு டீ ஸ்பூன், பட்டை கிராம்பு சிறிதளவு எடுத்து இவற்றை எண்ணெயில் வதக்கி பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து காய் வகைகளை வதக்கி அரைத்த பொடி, உப்பு சேர்க்கவும். இத்துடன் சாதம் சேர்த்துக் கிளறி கடைசியில் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் செய்தால் போதும். இதில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

ராகி பக்கோடா: ராகி மாவு தேவையான அளவு எடுத்து பொடியாக நறுக்கிய வெங் காயம் ஒரு கப், பொட் டுக் கட லை, இர ண்டு ஸ் பூன் வெண்ணெய், நறுக் கிய கீரை ஒரு கப், உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு பக்கோடா பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் பக்கோடாவாகப் போட்டு எடுக்கவும். இதில் இரும்புச் சத்து, நார்சத்து மற்றும் மைக்ரோ வைட்டமின் சத்துகள் உள்ளன.

டயட்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் குறைபாடு, பரம்பரைக் காரணங்கள், மரபணு மாற்றம், தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள ரசாயனம், கேன்சர், சர்க்கரை நோய்க்கு எடுத் துக் கொள்ளும் சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், சுற்றுச் சூழல் மாசு, வயது முதிர்வு உள் ளிட்ட பல காரணங்களால் முடி கொட்டும் பிரச் னை உள்ளது. முடிப்பிரச்னை அலோப்சியா என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண விஷயம். தைராய்டு ஹார்மோன் குறைபாட்டினாலும் முடி உதிரும். காப்பர், ஜிங்க், அயோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் முடி உதிரும் பிரச்னை அதிகரிக்கும். சிவப்பு, மஞ்சள் வண்ணக் காய்கள் மற்றும் பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை கட்டாயம் சேர்க்கவும். கேரட், எலுமிச்சை, தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி கள் சேர்க்கவும். அன்னாசி, பப்பாளி, ஆரஞ்சு சேர்க்கலாம். ஆட்டு ஈரல், மீன் மற்றும் மீன் எண்ணெய், பால், முட்டை கட்டாயம் சேர்க்கவும். சோயா மற்றும் சோயா பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாலாடைக்கட்டி, இளநீர், மோர், பனீர், நிறைய சேர்த்துக் கொள்ளலாம். காளான் சாப்பிடுவதன் மூலம் சத்துக் குறைபாட்டை தவிர்க்கலாம். பீன்ஸ், பாலாக்கீரை மற்றும் மொச்சை வகைகளையும் சேர்க்கலாம். தினமும் 12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மசாஜ், ஆயில் பாத், யோகா மூலம் சத்தான உணவு உட்கொண்டு முடி கொட்டும் பிரச்னையை தடுக்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*  முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.
*  முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*  மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.
*  மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.
*  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவள  ரும்.
*  பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத்    தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

கருத்துகளை தெரிவிக்க
malathi - nagai
1/17/2012 -- 16:42:14

good news

PANDU - chennai
7/8/2025 -- 18:19:23

வெரி fine

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana