இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டு இயந்திரங்களில் கோளாறு: பல மணிநேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

4/6/2021 5:35:14 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் முதல் சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவுக்கு காலதாமதமானது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், தொட்டிகளை கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு பட்டனை அழுத்தினால் அனைத்து வேட்பாளர்களின் பட்டனும் எரியத் தொடங்கியது. அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால் மாற்று வாக்கு பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேரம் லேட்டாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவள்ளூர் நகரம், லட்சுமிபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மையத்திலும் திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி அரசினர் கலை, அறிவியல் கல்லூரியிலும், பொன்னேரி தாலுகா காலஞ்சி கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலலும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதுபோல் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 462, 466 மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் உள்ள 417 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து வாக்குப்பதிவு துவங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் வக்கீல் பிஎஸ்.அமுல்ராஜ், வடபெரும்பாக்கம் சின்ன தோப்பு பகுதியில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

மேலும் சில
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி



  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்



  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை



  • தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:



  • இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா



  • கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை



  • மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் 44 சட்டமன்ற தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு: மத்திய அமைச்சர் உட்பட 3 பாஜ எம்பிக்கள் போட்டி



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: இரவு நேர ஊரடங்கு அறிவிக்கவும் திட்டம்



  • ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com