இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி

4/5/2021 5:13:46 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: நாட்டில் முதன்முறையாக அன்றாட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 478 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், குஜராத், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், பிப்ரவரி பாதியிலிருந்து ெகாரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நாட்டில் முதன்முறையாக அன்றாட தொற்று எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,25,89,067 என்றளவில் உள்ளது. அதேபோல் ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் பலியாகினார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பதிவாகி வருவதால் மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,074 பேருக்கு தொற்று உறுதியானது. மும்பையில் மட்டும் 11,163 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. மும்பை நகரில் இதுவரை 4,52,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7 கோடியே 91,05,163 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் ஏப். 2ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பரிசோதானை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, கோவிட் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி என 5 வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com