இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

புலனாய்வில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு நற்சான்று

4/2/2021 5:27:28 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, சைபர் மற்றும் ஹைடெக் குற்ற  விசாரணை மற்றும் பயிற்சி மையம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தடுப்பு, இன்டர்போல் ஒருங்கிணைப்பு பிரிவு, ஊழல் எதிர்ப்பு பிரிவு, பொருளாதார குற்றங்கள், வங்கி மோசடிகள், போதை மருந்துகள், வனவிலங்குகள் கடத்தல், ஆள் கடத்தல், கொலை சம்பவங்கள், வன்முறை வழக்குகள், குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு சிக்கலான வழக்குகளை விசாரித்து வருகிறது.

மிகவும் நம்பத்தகுந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படும் சிபிஐயில் சிறப்பாக பணியாற்றிய 56 அதிகாரிகளுக்கு சிபிஐ-யின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ‘சிபிஐ-யின் 59வது அறக்கட்டளை தினத்தில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 14 விசாரணை அதிகாரிகள், ஆறு அரசு அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. சிபிஐ இயக்குநர் (பொறுப்பு) பிரவீன் சின்ஹா, சான்றிதழ் பெற்ற தனது சகாக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது சிபிஐ அதிகாரிகளிடம் பேசிய சின்ஹா, ‘அரசியல், சட்டம், நீதிமன்றங்கள், மாநில அரசுகள் என்று ஏராளமான விவகாரங்களுக்கு மத்தியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. சிக்கலான பல விவகாரங்களை நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் சிபிஐக்கு பரிந்துரை செய்து வருகின்றன. அதுவே சிபிஐ மீதான நம்பகத்தன்மையை உறுதிபடுத்துகின்றன. கொரோனா காலத்தில் சிபிஐ அதிகாரிகள், ஊழியர்கள் திறம்பட தங்களது பணிகளை மேற்கொண்டதை பாராட்டுகிறேன்’ என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர்கள் அஜய் பட்நாகர் மற்றும் டி.சி.ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com