இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு

3/4/2021 6:09:08 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

* தொகுதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
* 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிட திட்டம்
* பாஜகவின் முடிவுக்காகவும் காத்திருப்பு

சென்னை: சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதன் மூலம் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிட டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியில் அழைப்பு வந்தால் சேரவும் தயாராக இருப்பதாக தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், பாஜகவுடன் சேர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெறும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டார். இதற்கு பாஜக தலைவர்களும் சம்மதித்தனர். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவரோ எக்காரணம் கொண்டும் தினகரனை கூட்டணியில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பாஜக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மக்களவை இடைத்தேர்தலில் அமமுக 52 தொகுதிகளில் கனிசமான இடங்களைப் பெற்றது. இதனால் 52 தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்கும் நிலை ஏற்படும் என்று அதிமுக தலைமையிடம் எச்சரித்தனர். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மறுத்து விட்டனர். இதனால், தினகரனின் ஆதரவாளர்களை தங்களுடைய சின்னத்தில் போட்டியிட பாஜக கூறியது. ஆனால் அதற்கு தினகரன் மறுத்து விட்டார். கூட்டணியில் இணைந்து குக்கர் சின்னத்தில் போட்டியிடத் தயார் என்றார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. இதனால் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு தினகரன் தள்ளப்பட்டார்.

அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு வினியோகம் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். 2வது நாளாக இன்றும் விருப்ப மனு வினியோகம் நடைபெறுகிறது. இந்தசூழ்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சசிகலா மறைமுகமாக டிடிவிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் தினகரனை ஒதுங்கும்படி கூறவில்லை. இதனால் தினகரன் தெம்பாகவே அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இந்தநிலையில், அமமுகவை 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வைக்க டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் அவர் இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், தேர்தல் பிரச்சார வாகனம் மற்றும் போஸ்டர்களில் ஜெயலலிதாவின் படங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். சசிகலா படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் தேர்தல் செலவிற்காக ஒதுக்கவும் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் விருப்பமனுக்கள் பெற்று வரும் நிலையில் விரைவில் வேட்பாளர் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், வரும் 10ம் தேதி 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன்  வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி



  • ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்



  • சென்னையில் இன்று காலை திடீர் மழை: 4 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும்..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகத்தில் கொரோனா மீண்டும் உச்சம்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு?..காபந்து முதல்வர் எடப்பாடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை



  • தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் கொரோனாவுக்கு பலி:



  • இந்திய கம்யூனிஸ்ட், பாஜ வேட்பாளர்களுக்கு கொரோனா



  • கொரோனா பாதிப்பு தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை



  • மேற்குவங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் 44 சட்டமன்ற தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு: மத்திய அமைச்சர் உட்பட 3 பாஜ எம்பிக்கள் போட்டி



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: இரவு நேர ஊரடங்கு அறிவிக்கவும் திட்டம்



  • ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடு 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com