இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது: ஓரிருநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

2/23/2021 5:12:04 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று தெரிகிறது. புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து விலகியதால் பெரும்பான்மை இழந்தததாக எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளப்பின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் தலா 11 பேர் இருந்தனர்.

3 நியமன எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் விவகாரம் தொடர்பாக அரசு கொறடா அவையில் பிரச்னை எழுப்பினார். இதற்கு நியமன எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, நாராயணசாமி உள்ளிட்ட அவையில் இருந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து வாக்கெடுப்பு நடத்தாமலேயே அதிரடியாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுங்கட்சி தரப்பு ராஜ்நிவாஸ் சென்றது. அங்கு முதல்வர் தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் அளித்தார். இதன்மூலம் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. 2 வாரமாக புதுவையில் நீடித்த பரபரப்பு அடங்கியுள்ளது. இதனிடையே எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உதவியுடன் ஆட்சி அமைக்க இதுவரை உரிமை கோரவில்லை. இதற்கிடையே நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து சபாநாயகரிடம் அறிக்கை பெறுவது, அமைச்சரவை ராஜினாமாவை ஏற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது, அனைத்து விபரங்களையும் தொகுத்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற பணிகளில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால் அன்றுமுதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் ஆட்சி அமைந்தாலும் புதிய நலத்திட்ட உதவிகளை அறிவிக்க முடியாது. எனவே அதிகாரம் இல்லாத காபந்து அரசு போலவே செயல்பட முடியும் என்பதால் ஆட்சி அமைக்க ரங்கசாமி ஆர்வம் காட்டவில்லை. மேலும் இச்செயல் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.

எனவே புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலாக அதிக வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது. ஜனாதிபதி ஆட்சி அமலாகும்பட்சத்தில் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை முழுமையாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார். சட்டசபை தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும்வரை இந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com