இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை

2/21/2021 6:21:43 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்ட இருநாடுகளின் படைகளையும் விலக்கிக் கொள்ள இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16 மணி நேர பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா-சீன நாடுகளின் லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஒன்பதாவது சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்தது. இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து திரும்பி செல்ல ஆரம்பித்தன. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் இதனை உறுதிப்படுத்தினார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதனை மக்களவையில் உறுதிப்படுத்தினார். பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகள் விலக்கப்படுவது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டது.

கல்வான் தாக்குதலில் தங்கள் தரப்பு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உயிரிழந்தனர் என்று சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டது. இந்நிலையில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையிலான 10ம் கட்ட பேச்சுவார்த்தை மோல்டோ எல்லைபகுதியில் நேற்று நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 4 மணி வரை சுமார் 16 மணி நேரம் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான குழுவும், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின் தலையிலான குழுவும் பங்கேற்றன.

இதில், லடாக் எல்லையில் பாங்காக் ஏரி தவிர ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என்று ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கிழக்கு லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீன வீரர்கள் திரும்பி செல்லும்படி இந்திய சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்ட  இருநாடுகளின் படைகளையும் மற்ற பகுதிகளிலும் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ள இருநாட்டின் ராணுவ அதிகாரிகள்  மட்டத்திலான 16 மணி நேர பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.  இதையடுத்து எல்லையில் இருந்து படைகளை உடனடி யாக வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் டுவீட்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவும், சீனாவும் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்துள்ளதாக ஊடகங்கள் ெதரிவிக்கின்றன. அதாவது ஜூன் மாதத்தில், உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்று நாம் எடுத்துக்கொண்ட பகுதிகளை இந்தியா விட்டுவிட்டது. ஆனால் சீன ராணுவம் உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, நமது பக்கத்திலுள்ள டெப்சாங்கில் குடியிருப்புகளைக் கட்டியது. அதன் நிலையென்ன? அமைதி...!’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதே விவகாரம் குறித்து ஏற்கனவே சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தீர்க்கப்பட வேண்டிய புதிர்! சீன ராணுவம், உண்மை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியைக் கடந்து இந்தியாவின் பிரதேசத்திற்குள் நுழையவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. ஆனால் தற்போது, ‘இது அரசின் ராஜதந்திர வெற்றி; இந்தியப் பிரதேசத்திலிருந்து சீனா பின்வாங்கத் தொடங்கியுள்ளது’ என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டும் உண்மையாக இருக்க முடியுமா?’ என்று பதிவிட்டுள்ளார்.

பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அடுத்தடுத்த சில நாட்களில் வெளியிட்ட டுவிட்டில், சீன ஆக்கிரமிப்பு குறித்து சந்தேகத்தை கிளப்பி  இருப்பதோடு மத்திய அரசை கிண்டல்  செய்திருப்பது   அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



  • 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை: 19 நாளில் 13 முறை விலை உயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com