இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

2/11/2021 5:16:07 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுடெல்லி: இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசின் புகார்கள் குறித்து டுவிட்டர் நிறுவனம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய அரசு, டுவிட்டரின் இந்தப் போக்கு தொடர்ந்தால், அந்நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், டுவிட்டர் மூலம் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அந்த பதிவுகளை தொடர்ந்து ‘விவாயிகளின் போராட்டம், விவசாயிகளை காப்பாற்றுவோம்’ என்ற ஹேஷ்டாக்குகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

‘இந்த பதிவுகள் பலவற்றில் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. உண்மைக்கு புறம்பான விஷயங்கள் வேகமாக பரவுகின்றன. எனவே அந்தப் பதிவுகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு, டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால் இது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று டுவிட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, ‘அமெரிக்காவில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறைகளுக்கு பின்னர் டுவிட்டர் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக உள்ளது இந்தியாவில் அதே நிறுவனம் மேற்கொள்ளும் அணுகுமுறை. உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டு, நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கும் பதிவுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்ட பிறகும், டுவிட்டர் நிறுவனம் இவ்வாறு நடந்து கொள்வது அர்த்தமற்றது’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று காலை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகளின் போராட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான பதிவுகளை வெளியிட்டுள்ள 1,178 பேரின் டுவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். இந்த உத்தரவுக்கு பின்னரும் ட்வீட்டர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் வரவில்லை. இந்தியாவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தவறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக டுவிட்டரை தடை செய்வதுடன், அந்நிறுவனத்தின் இந்திய உயரதிகாரிகளை கைது செய்யவும் நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில
  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com